Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த நிலையில் டெல்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் காத்திருக்கும் நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் சிலிண்டர்கள் என கூறி தீயணைப்புக் கருவிகளை சிலர் நேற்று விற்றுள்ளனர். ஒரு கருவியை ரூ.10 ஆயிரத்துக்கு அவர்கள் விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து கீதா அரோரா என்பவர் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படை யில், டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்த அஸுதோஷ் சவுஹான் (19), ஆயுஷ் குமார் (22) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.